×

திருத்துறைப்பூண்டியில் வருண பகவானிடம் மழை வேண்டி விவசாயிகள் நூதன வழிபாடு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவைப் சாகுபடி செய்யப்பட்டு தற்போது பரவலாக இயந்திரம் மூலம் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் செய்ய தாலுக்கா முழுவதும் 23 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நெல் ஈரபதம் 23 சதவீதம் வரை உள்ளது. நெரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 17 ததவீதம் ஈரபதம் வரை தான் கொள்முதல் செய்யப்படுவதால் தனியார் வியாபாரிகளிடம் நெல்மூட்டைகள் விற்க வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டியில் வருண பகவானிடம் மழை வேண்டி விவசாயிகள் நூதன வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Lord Varuna ,Thirutharapoondi ,Tiruthurapoondi ,Thiruthurapoondi ,Tiruvarur district ,
× RELATED வருண பகவானின் கருணை கிடைக்குமா? பறக்கை...